பற்றி NCPA | National Child Protection Authority
பற்றி NCPA Banner image

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்பது,

இலங்கை பாராளுமன்றத்தினால் “1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின்” மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தாபிக்கப்பட்டது.  

நோக்கம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல்.

நோக்கு

சிறுவர்களுக்கு சாதகமானதும், பாதுகாப்பானதுமான சூழலொன்றை கட்டியெழுப்புதல்.

செயற்பணி

சிறுவர்கள் சகல வகையிலுமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாத்தல்.

History of NCPA

2010

1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை அதிகாரசபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு 24 மணி நேரமும் முறையாகவும், வேகமாகவும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை அறிக்கையிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு உச்சளவில் நலனை செய்துகொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1989

1989 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி 'ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்' உலகப் பிரகடனமாக அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை அரசும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் 1990 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளதுடன், 1991 யூலை மாதம் 12 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரவை அங்கீகரித்துள்ள சிறுவர் சமவாயம் தயார் செய்யப்பட்டதுடன், சிறுவர் உரிமைகள் சமவாயத்தை ஒழுங்குறுத்தல் மற்றும் அவசியமான சந்தர்ப்பத்தில் சர்வதேச சிறுவர் உரிமைகள் சமவாயக் குழுவுக்கு அறிக்கையிடும் பொறுப்பைக் கொண்டுள்ள தேசிய கண்காணிப்புக் குழு தாபிக்கப்பட்டது.

2011

2011 இன் 17 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையான சிறுவர் பாதுகாப்புக் குழு முறைக்கு அமைய 2012 ஆம் ஆண்டில் முதலாவது பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டதுடன், 2019 இல் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.

2008

ஆம் ஆண்டு,

  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சிறுவர் துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய தினத்தை முதற் தடவையாக கொண்டாடப்பட்டது.
  • சுனாமியினால் இடம்பெயர்ந்திருந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தரவுக் களஞ்சியத்தை கட்டியெழுப்பியமை.
  • சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவின் கீழ் மத்திய அறிக்கை அறை தாபிக்கப்பட்டமை.
  • மேலும், முதற் தடவையாக சிறுவர் நட்புறவு நிலையமொன்று வவுனியா மாவட்ட செயலக வளவில் தாபிக்கப்பட்டது.

2006

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் நலன்புரி பொறிமுறையை தாபிப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் இதற்கென தனியான அமைச்சும் தாபிக்கப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கிவருகின்றது.

2005

சுனாமி அனர்த்தத்தை அடுத்து 2005 இன் 16 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சிறுவர்களின் நல்ல நிலைத்திருத்தலுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிதாக மென்மேலும் தத்துவமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2005 இன் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தின் மூலமும் ஒரு பிள்ளை குடும்ப வன்முறைக்கு ஆளாவது பற்றி அதிகாரசபைக்கு அறியக் கிடைக்கும் போது, அது சம்பந்தமாக மூன்றாம் தரப்பினராக அதில் தலையிட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தத்துவமளிக்கப்பட்டது.

 

2002

2002 மார்ச் மாதம் 27 ஆம் திகதி முன்னாள் சனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திருமதி லின்டா டுபில்ட்டின் தலைமையில் பிரித்தானிய அரசின் நிதி உதவியின் கீழ் புதிய அலுவலகம், தற்போது காணப்படுகின்ற இலக்கம் 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, கோட்டே எனும் இடத்தில் திறந்துவைக்கப்பட்டது. மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் விசேட பொலிஸ் விசாரணை அலகும் இணைக்கப்பட்டது.

1998

சனாதிபதி செயலணி சமர்ப்பித்திருந்த மிகவும் முக்கியமான சிபாரிசாக இருப்பது, சனாதிபதி செயலகத்தின் கீழ் 1998 இன் 50 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையைத் தாபிப்பதாகும்.

1998 ஆகஸ்ட் மாதம் அப்போதைய நீதி அமைச்சினால் 1998 இன் 50 ஆம் இலக்க “தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம்” பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 1998 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1998 இன் 50 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய, 1994 யூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாரசபை சபையின் தவிசாளாராக, பேராசிரியர் திரு டி.ஜி. ஹரேந்திர டி சில்வா அவர்களும் மற்றும் அதிகாரசபையின் நிருவாக சபையும் நிமயனம் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரசபை இயங்க ஆரம்பித்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முதலாவது அலுவலகம் சனாதிபதி செயலகத்தின் பிரிவொன்றாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இது சனாதிபதி செயலகத்தின் நிருவாகம் மற்றும் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருந்தது.

1996

1996 ஆம் ஆண்டு அப்போதைய சனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பற்றிய சனாதிபதி செயலணியை நியமனம் செய்தார். சனாதிபதி செயலணியின் அறிக்கையில் உள்ளடங்குகின்ற சட்டரீதியான திருத்தங்கள் மற்றும் நிருவாக ரீதியான மறுசீரமைப்புக்கள் பல இச்செயலணியினால் சிபாரிசு செய்யப்பட்டன.

1929

சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை அதிகாரசபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு 24 மணி நேரமும் முறையாகவும், வேகமாகவும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை அறிக்கையிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு உச்சளவில் நலனை செய்துகொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Functions of NCPA

  • Advise the Government in the formulation of a national policy on the prevention of child abuse and the protection and treatment of children who are victims of such abuse.
  • Advise the Government on measures for the prevention of child abuse and protection of the victims of such abuse.
  • Create an awareness, of the right of a child to be protected from abuse and the methods of preventing child abuse.
  • Consult the relevant ministries, Provincial Councils, local authorities, District and Divisional Secretaries, public and private sector organizations and recommend all such measures as are necessary, for the purpose of preventing child abuse and for protecting and safeguarding the interests of the victims of such abuse.
  • Recommend legal, administrative or other reforms required for the effective implementation of the national policy for the prevention of child abuse.
  • Monitor the implementation and progress of laws relating to all forms of child abuse.
  • Recommend measures to address the humanitarian concerns relating to children affected by armed conflict and the protection of such children, including measures for their mental and physical well-being and their re-integration into society and to take appropriate steps where necessary for securing the safety and protection of children involved.
  • Receive complaints from the public relating to child abuse and where necessary, to refer such complaints to the appropriate authorities.
  • Advise and assist Provincial Councils and local authorities, and nongovernmental organizations to co-ordinate campaigns against child abuse.
  • Prepare and maintain a national data base on child abuse.
  • Consultation with the relevant ministries and other authorities to supervise and monitor all religious and charitable institutions which provide child care services to children.
  • Conduct, promote and co-ordinate, research in relation to child abuse and child protection.
  • Provide information and education to the public regarding the safety of children and the protection of the interests of children.
  • Engage in dialogue with all sections connected with tourism with a view to minimizing the opportunities for child abuse.
  • Organize and facilitate, workshops, seminars and discussions, relating to child abuse.
  • Liaise and exchange information with foreign Governments and international organizations, with respect to detection and prevention of all forms of child abuse.