1929 அழைப்பு மைய உதவிச்சேவை | National Child Protection Authority
1929 அழைப்பு மைய உதவிச்சேவை  Banner image

1929 இலங்கை சிறுவர் உதவி சேவை

1929 இலங்கை சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14(ஓ) முறைப்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்ளல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை முறையான அதிகாரியிடம் சமர்ப்பிப்பதன் அடிப்படையில் இப்பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இப்பிரிவினால் தொலைபேசி ஊடாகக் கிடைக்கின்ற சகல அழைப்புக்கள் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறே இச்சேவை 24 மணி நேரமும் 365 நாட்களிலும் இயங்கிவருவதுடன், சகல தொலைபேசி அழைப்புக் கட்டணங்களிலிருந்தும் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொலைபேசி சேவைக்கு 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளை தொடர்பிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை எந்தவொரு பிள்ளையோ, பெற்றோரோ, பாதுகாவலரோ அல்லது எந்தவொரு நபரும் வழங்க முடியும்.

 

அத்துடன் சிறுவர்கள் பற்றிய ஆலோசனைகள், உளவியல் சமூக ஆலோசனை அல்லது உளவியல் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் உள்ளது. இதன் போது தகவல்களை வழங்கும் எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு உண்டு. மேலும் குறித்த தகவல்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கட்டுப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசிச் சேவை ஊடாக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தவறுகள், சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தின் கீழான தவறுகள், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் கீழான தவறுகள், கட்டாயக் கல்வி பற்றிய சட்டத்தின் கீழான தவறுகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற எந்தவொரு துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களையும் சமர்ப்பிக்க முடியும்.

யாதாயினுமொரு ஆலோசனை சேவை மற்றும் சட்ட ஆலோசனை அவசியமெனின் அதிகாரசபையின் சட்டப் பிரிவு அல்லது உளவியல் சமூக பிரிவை தொடர்புபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.