தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது இலங்கையின் தகுதிவாய்ந்த பிரஜைகளிடமிருந்து கீழுள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருகிறது.
1. சபைச் செயலாளர் - (JM 1-1) 01 பதவி வெற்றிடம் - (ஒப்பந்த அடிப்படையில் 01 வருடம்)
2. முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் - (MA 2-1) 09 பதவி வெற்றிடங்கள்
3.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் அல்லாதது - (MA 1-1) 15 பதவி வெற்றிடங்கள்
விசேட அறிவித்தல்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் 2025 மே 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட சண்டே ஒப்சோவர், தினமணி மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களுடன் தொடர்புடையது.
இது தொடர்பான விளம்பரம் மற்றும் மாதிரி விண்ணப்பத்தைப் பதிவிறக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.
https://childprotection.gov.lk/ta/careers/vacancies
பத்திரிக்கை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025.06.05 அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் பதவி மற்றும் பரீட்சைக்குத் தோன்றுவதற்கான விருப்பமான மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஆகியவை உறையின் மேல் இடது பக்க மூலையில் குறிப்பிடப்பட வேண்டும்.
முகவரி: தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, எண்: 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுர.